உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அதிகாரிகள், சூளகிரி அடுத்த பாளையம் கிராமம் அருகே, ராயக்கோட்டை சாலையில் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், சூளகிரியில் இருந்து ஓசூருக்கு, 6 யூனிட் எம்.சாண்ட் மண்ணை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர், உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !