உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே, நான்கு சக்கர வாகன உதிரிபாகம் விற்பனை செய்யும் கடையில், ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடிச் சென்றவர்களை, போலீஸார் தேடி வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், குந்தாரப்பள்ளி கூட்டுரோடு அருகே நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடை மேலாளர் பிரபாகரன் வழக்கம் போல் கடையை மூடி சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடை ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருடு போய் இருப்பது தெரிந்தது. குருபரப்பள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ