மேலும் செய்திகள்
முடங்கி கிடக்கும் திருமக்கோட்டை மின் நிலையம்
06-Aug-2024
கிருஷ்ணகிரி: எரிவாயு நுகர்வோர், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடனான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடக்க உள்ளது. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் நடத்தப்படும் எரிவாயு நுகர்வோர், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுடனான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் வரும், 28 மாலை, 3:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர் கூட்டரங்கில், டி.ஆர்.ஓ., சாதனைகுறள் தலைமையில் நடக்க உள்ளது. இதில், அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதால், நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
06-Aug-2024