உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக்குகள் மோதிய தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது

பைக்குகள் மோதிய தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 25, தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த, 3ல், மகனுார்பட்டி பாலம் அருகில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, விசுவாசம்பட்டியை சேர்ந்த ஏழுமலை, 22 என்பவர் எதிரில் பைக்கில் வந்துள்ளார்.அப்போது பைக்குகள் மோதியது. இதில் ஏற்பட்ட தகராறில் நவீன்குமாரை ஏழுமலை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த நவீன்குமார் புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார் ஏழுமலையை கைது செய்தனர். அதேபோல ஏழுமலை புகார் படி, நவீன்குமார் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ