உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பழைய மொபைல் போன்கள் திருட்டு

பழைய மொபைல் போன்கள் திருட்டு

ஓசூர் : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அப்துல் கரீம் தெருவை சேர்ந்-தவர் இம்ரான், 26. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் உள்ள ஓசூர் சாலையில், மொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த, 17 இரவு, 9:00 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வந்து பார்த்த போது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 8 பழைய மொபைல்போன்கள் திருட்டு போயிருந்தது. இம்ரான் கொடுத்த புகார்படி, ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்-களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி