உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேனீ, காளான் வளர்ப்பு இலவச பயிற்சி தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு

தேனீ, காளான் வளர்ப்பு இலவச பயிற்சி தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி: இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், தேனீ, காளான் வளர்ப்பு மற்றும் பேக்கரி உணவு பொருட்கள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.இது குறித்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியிலுள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், ஆண், பெண் இருபாலருக்கும், 10 நாட்கள் தேனீ, காளான் வளர்ப்பு மற்றும் பேக்கரி உணவு பொருட்கள் தயாரிப்பு குறித்து, இலவச பயிற்சி விரைவில் துவங்குகிறது. 8ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயது வரையுள்ள ஆண், பெண் இருபா-லரும் நாளை, (16க்குள்) கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதி-யிலுள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியில், சீருடை, காலை, மதிய உணவும், பயிற்-சிக்கான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கும். முடிவில் பயிற்சி சான்றிதழும், தேர்ச்சி சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுய-வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி, என்ற விலாசத்திலும், 94422 47921, 90806 76557 என்ற எண்களிலும் தொடர்பு கொள்-ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை