மேலும் செய்திகள்
கோவில் திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்
07-Aug-2024
கிருஷ்ணகிரி: கிட்டம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.கிருஷ்ணகிரி அருகிலுள்ள கிட்டம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி நேற்று காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்-தது. தொடர்ந்து, கிட்டம்பட்டி கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலில் இருந்து திருவண்ணாமலை சாலை வழியாக சென்று, மீண்டும் கோவிலுக்கு திரும்பி சுவாமிக்கு படைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் காளி மற்றும் அம்மன் வேடமணிந்தும், தீச்சட்டி ஏந்-தியும், அலகு குத்தியும் வேண்டுதல் நிறைவேற்றினர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு கோலாட்டம் நடந்தது. 2வது நாளான இன்று மாலை, 3:00 மணிக்கு, கிட்டம்பட்டியில் எருதுவிடும் திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிட்டம்பட்டி ஊர்-மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
07-Aug-2024