உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விபத்தில் பலியானவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் பலியானவரின் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 27, தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கினார். ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. நேற்று மாலை சக்திவேலின் உடல் அவரது கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு மாலை அணிவித்து, அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ