டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பிக்கனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி, 51, விவசாயி; இவர் நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு தனது நிலத்தில் நெல் பயிர் செய்ய, நிலத்தை டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து, அதற்கு அடியில் சிக்கிய வெங்கடாஜலபதி, சம்பவ இடத்திலேயே பலியானார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.