உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கணவர் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது

கணவர் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது

ஓசூர் : தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே கூர்க்கம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 45, கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி நந்தினி, 35. இவர்களுக்கு, பிளஸ் 2 படிக்கும் மகளும், 10ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டில் குடும்பத்துடன் கோவிந்தராஜ் வசித்தார். நந்தினி, காபி ஷாப்பில் பணியாற்றி வந்தார். அவரது நடத்தையில் சந்தேகமடைந்து, அடித்து துன்புறுத்தி வந்ததோடு, வேலைக்கு செல்லாமல், குடிக்க பணம் கேட்டு, கோவிந்தராஜ் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர், மனைவியிடம் தகராறு செய்தார்.நேற்று அதிகாலை, அக்கம் பக்கத்தினரை எழுப்பிய நந்தினி, கணவர் அசைவின்றி கிடப்பதாக தெரிவித்தார். ஓசூர் அரசு மருத்துவமனையில், அவரை பரிசோதனை செய்த டாக்டர், கோவிந்தராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.பிரேத பரிசோதனையில், கழுத்தை நெரித்து கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.ஓசூர் டவுன் போலீசார் நந்தினியிடம் நடத்திய விசாரணையில் கணவர் குடித்து விட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு குடி போதையில் அடித்ததால், கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை