பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 2 பேர் கைது
ஓசூர்:ஓசூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் சீதாராம்மேடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற இருவர், ஆபாசமாக பேசி, பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்தும் செல்லவில்லை.இதையடுத்து பொதுமக்களிடம் ஆபாசமாக பேசிய ஓசூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரத், 26, நல்லுாரை சேர்ந்த கார்த்திக், 26, ஆகியோரை, ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.