உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.க., கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.க., கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில், தி.மு.க., கவுன்சிலர் உள்-பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் எளையாம்பாளையம் குட்-டையக்காடு அப்புசாமி தோட்டத்தில், நேற்று அதிகாலை காஞ்சி-கோவில் போலீசார் நடத்திய சோதனையில், 7 லிட்டர் கள்ளச்சா-ராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த, 8 கிலோ வெள்ளை வேலாம்பட்டை, ஒரு மண் பானை, பிளாஸ்டிக் பேரல் இரண்டு, காஸ் அடுப்பு ஒன்று, காஸ் டிரம் ஒன்று, ஈய அண்டா மூன்று, பிளாஸ்டிக் குடம் இரண்டு, ரப்பர் டியூப் ஒன்று, சில்வர் குண்டாவில் மூன்று லிட்டர் திராட்சை பழ-ரசம், சில்வர் பேசன் ஒன்று, விவோ போன் ஒன்று ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, பெத்தாம்பாளையம் கோவில் பாளையத்தை சேர்ந்த சுரேஷ் குமார், 42, பெத்தாம்பாளையம் வள்ளி நகரை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி முத்துசாமி, 50, ஆகிய இரு-வரை ஈரோடு மதுவிலக்கு போலீசில் ஒப்படைத்தனர். இதைய-டுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் கைதான சுரேஷ் குமார், பெத்தாம்பாளையம் பேரூராட்சி 3வது வார்டு, தி.மு.க., கவுன்சிலராகவும், பெருந்துறை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி