உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆட்டோவில் கடத்த முயன்ற 205 கிலோ குட்கா பறிமுதல்

ஆட்டோவில் கடத்த முயன்ற 205 கிலோ குட்கா பறிமுதல்

ஓசூர், ஓசூர், டவுன் போலீசார் அமீரியா ஜங்ஷன் அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த, சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், ஆட்டோவிற்குள், 205 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில், அவை பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தப்பட்டதும், அதை கடத்தி வந்தவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பெரிய கூளியூர் பக்கமுள்ள கண்ணகாடுவை சேர்ந்த வினோத், 35 என்பதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.வங்கி நகை மதிப்பீட்டாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை