உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரவுடி உட்பட 3 பேர் கைது

ரவுடி உட்பட 3 பேர் கைது

ஓசூர்: ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் போலீசார், சானசந்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு விளை-வித்து, ஆபத்தை ஏற்படுத்தியதாக, சானசந்திரத்தை சேர்ந்த கலி-முல்லா, 23, கிருஷ்ணகிரி மில்லத் நகரை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகிய, 2 பேரை போலீசார் கைது செய்தனர். பேரிகை ஸ்டேஷன் எஸ்.ஐ., அமர்நாத் மற்றும் போலீசார், ஏ.செட்டிப்-பள்ளி டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றனர். அப்பகுதியில் மக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, புன்னாகரத்தை சேர்ந்த நரசிம்மன், 27, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்