மேலும் செய்திகள்
இறந்து கிடந்த டிரைவர் போலீசார் விசாரணை
18-Nov-2024
ஓசூர்: கர்நாடகா மாநில எல்லையான ஆனைக்கல் அருகே கச்சநாயக்கன-ஹள்ளியை சேர்ந்த ரமேஷ் என்பவரது வீட்டில், அசாம் மாநி-லத்தை சேர்ந்த பதன்தாஸ், தயாள், குலாப் ஆகிய மூன்று பேர் வாடகைக்கு தங்கியிருந்தனர். நேற்று காலை வழக்கம் போல் எழுந்து, சமையலறையில் சமையல் பணியை மேற்கொள்ள மின்-விளக்கை ஆன் செய்தனர். அப்போது காஸ் சிலிண்டரில் கசிவு இருந்ததால், திடீரென சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், வீட்டில் இருந்த பதன்தாஸ், தயாள், குலாப் ஆகிய, 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவம-னையில் அனுமதித்தனர். 50 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட்டில் இருந்த ஜன்னல், கதவுகள், பொருட்கள் கடுமையாக சேதமடைந்-துள்ளன. ஆனைக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
18-Nov-2024