அரசு மாநகராட்சி பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள்
ஓசூர், ஓசூர், பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 1 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன. கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், பேச்சுப்போட்டி, தேசபக்தி பாடல்கள், மாறு வேடப்போட்டி, பரத நாட்டியம், ரங்கோலி, நாட்டுப்புற பாடல், கிராமிய நடனம், பல குரல் என மொத்தம், 32 போட்டிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமையாசிரியர் பொன்நாகேஷ் தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.--