உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒகேனக்கல்லில் குளிக்க 16 நாட்களுக்கு பின் அனுமதி

ஒகேனக்கல்லில் குளிக்க 16 நாட்களுக்கு பின் அனுமதி

ஒகேனக்கல்லில் குளிக்க 16 நாட்களுக்கு பின் அனுமதிஒகேனக்கல், அக். 30-கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, கேம்பாகரை, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், கடந்த, 2 வாரமாக, ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துதது. தற்போது மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 16,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 10,000 கன அடியாக சரிந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க, 16 நாட்களுக்கு பின் நேற்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, மெயின் பால்ஸில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !