உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 10 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 10 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி அடுத்த பில்லனக்குப்பம் ஏரிக்கரை அருகில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து, எருது விழாவை ஏற்பாடு செய்த பில்லனக்குப்பம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், 30, சுரேஷ், 37, பாலாஜி, 29, பார்த்திபன், 37, பாலு, 22 ஆகிய, 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல கிருஷ்ணகிரி, செட்டியம்பட்டியில் அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவை ஏற்பாடு செய்த கிருஷ்ணகிரி செந்தில் நகரை சேர்ந்த செல்வா, விக்னேஷ், சக்திவேல், சுதர்சன், பிரவீன் ஆகிய, 5 பேர் மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை