உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

ஓசூர்: ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் பகுதியில், 12 ஏக்கர் பரப்ப-ளவில் பட்டாளம்மன் ஏரி உள்ளது. இதை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக உள்ள இந்த ஏரியில், தொழிற்சாலை, கேன்டீன் கழி-வுகள் கலப்பதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில் ஏரியில் நேற்று ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து துர்நாற்றம் வீசியது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம், ஏரி நீரை ஆய்வு செய்து, உண்மை தன்மையை கண்டறிய, கோவிந்த அக்ரஹாரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை