ரயில்வே தண்டவாளத்தில் அழுகிய ஆண் சடலம் மீட்பு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் மாரநாயக்கனஹள்ளி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, ரயில்வே தண்டவாளத்தின் அருகே, 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரி வினோத்குமார் சிங்கிற்கு, நேற்று தகவல் கிடைத்தது. அவரது புகார் படி, ஓசூர் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.இறந்த நபர், ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த ஏதாவது ஒரு ரயில் மோதி இறந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. அவர் உயிரிழந்து, ஒரு வாரம் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டது. இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.