உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யானைகள் கூட்டத்தால் நெல்வயல்கள் நாசம்

யானைகள் கூட்டத்தால் நெல்வயல்கள் நாசம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களாக யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்-ளது. விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசமாக்கு-வதும் தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, கெலமங்-கலம் அடுத்த நாகமங்கலம் அருகே எம்கொத்துார் கிராமத்தில் வசிக்கும் விவசாயி சிவராஜ் நிலத்தில் புகுந்த, 5-க்கும் மேற்பட்ட யானைகள் அங்கிருந்த, 1.25 ஏக்கர் நெற்பயிர்களை முழுமையாக சேதப்படுத்தி சென்றுள்ளது. நேற்று காலை நிலத்திற்கு சென்ற விவசாயி சிவராஜ் சேதம-டைந்த பயிர்களை பார்த்ததும் கவலையடைந்தார். இதற்கு உரிய நிவாரணம் உடனே வழங்க வேண்டுமென, வனத்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அரசு சார்பில் மானியம் விலையில், சோலார் அமைக்க ஏற்பாடு செய்து கொடுக்க வேண்-டுமென, அப்பகுதி விவசாயிகள், மாவட்ட வன அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்