| ADDED : நவ 13, 2025 03:06 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தீய-ணைப்பு துறையினர் பயன்படுத்தும் விதமாக, செய்யார் தனியார் நிறுவனங்கள், சி.எஸ்.ஆர்., நிதியில், 2.55 லட்சம் ரூபாய் மதிப்பில், 6 மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் தினேஷ் குமாரிடம் வழங்கினர். இது குறித்து கலெக்டர் கூறுகையில், “கிருஷ்ணகிரி மாவட்-டத்தில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்-களில் பேரிடர் மீட்பு பணிகளுக்காக சாலைகள் மற்றும் குடியி-ருப்பு பகுதிகளில் மரங்கள் விழும்போது துரிதமாக அகற்றும் பொருட்டு, போச்சம்பள்ளி சிப்காட்டில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் தலா, 42,500 வீதம் மொத்தம், 2.55 லட்சம் ரூபாய் மதிப்பில், 6 மரம் அறுக்கும் இயந்திரங்களை வழங்கினர். தொடர்ந்து தீயணைப்பு துறையினரிடம் இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது,” என்றார். மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர் வேலு, தனி தாசில்தார்கள் வெங்கடேசன், குருநாதன், மற்றும் தீய-ணைப்பு நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.