மனைவி சாவில் சந்தேகம் போலீசில் கணவர் புகார்
மொரப்பூர், தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த கணபதிப்பட்டியை சேர்ந்தவர் முருகன், 42, இவரது மனைவி கீதா, 35. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த, 20 நாட்களுக்கு முன், தம்பதியர் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர்.நேற்று முன்தினம் மதியம், 1:45 மணிக்கு வீட்டில் இருந்த கீதா, பூச்சி மருந்து குடித்துள்ளார். அவரை சிலர் மீட்டு மொரப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது கணவர் முருகன் அளித்த புகார்படி மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.