உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கம்பன் கழக அறக்கட்டளை 14ம் ஆண்டு விழா

கம்பன் கழக அறக்கட்டளை 14ம் ஆண்டு விழா

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், கம்பன் கழக அறக்கட்டளையின், 14ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, கம்பன் கழக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயல் தலைவர் உமா வரவேற்றார். 'கம்ப ராமாயண நன்னெறிகளை பெரிதும் பின்பற்ற வேண்டியது குடும்பமே, சமுதாயமே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. மாணவர்களுக்கு கம்பர் பற்றி பல்வேறு கருத்துக்களை கூறி, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கம்பன் கழக அறக்கட்டளை செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை