ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட உதவி புவியியலாளர் மற்றும் கனிமவள பிரிவு அலுவலர் வர்ஷா மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் கல்லாவி அடுத்த ஒண்டிபனைமரம் பஸ் ஸ்டாப் அருகில் சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. அவர்கள் புகார் படி, கல்லாவி போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.