மண் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி:ஆலப்பட்டி ஆர்.ஐ., சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் பழைய பேயனபள்ளி கூட்ரோடு அருகே வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த லாரியை சோதனையிட்டதில், அரை யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. சீனிவாசன் புகார் படி கே.ஆர்.பி., டேம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிரைவர் காவாகவுண்டனுாரை சேர்ந்த முத்து, 45, என்பவரை தேடி வருகின்றனர்.