உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுமியை கடத்தியதில் ஆத்திரம் பெண்ணை தாக்கியவர் கைது

சிறுமியை கடத்தியதில் ஆத்திரம் பெண்ணை தாக்கியவர் கைது

கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டை அடுத்த நடுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தவமணி, 50. இவரது மகன் ராமன் என்பவர், அருகிலுள்ள பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தார். இதில், அவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியில் வந்தார். இந்நிலையில், அவர் குடும்பத்தினர் மீது, சிறுமியின் குடும்பத்தினருக்கு முன்விரோதம் இருந்தது. கடந்த, 19ல் ராமன் வீட்டிற்கு சிறுமியின் தந்தை சேட்டு, 50, என்பவர் சென்றுள்ளார். அங்கு ராமன் இல்லை. இருப்பினும் வீட்டில் இருந்த அவரது தாய் தவமணியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினார். இது குறித்து, தவமணி நேற்று முன்தினம் அளித்த புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார் சேட்டுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை