உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

ஓசூர், அஞ்செட்டி தாலுகா ஏத்தகிணறு வி.ஏ.ஓ., ரஜினி மற்றும் அலுவலர்கள் ரோந்து பணியில ஈடுபட்டனர். அப்போது அந்த ஊரை சேர்ந்த முருகன், 57, என்பவர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில், அவரது வீட்டில் நாட்டு துப்பாக்கி ஒன்று இருந்தது தெரிந்தது. இது குறித்து ரஜினி புகார்படி, அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனர். நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி