அடிப்படை வசதி செய்து கொடுப்பதாக மேயர் உறுதி
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 14வது வார்டுக்கு உட்பட்ட சுண்ணாம்பு ஜிபி மற்றும் துர்கா நகர், பிருந்தாவன் நகர் மெயின் ரோடு ஆகிய பகு-திகளில், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, கழிவு நீர் கால்வாய், தெருவிளக்கு, சாலை வசதி செய்து கொடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் குறைகளை கேட்டறிந்த மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், அடிப்படை வசதிகளை செய்து கொடுப்-பதாக உறுதியளித்தனர். கவுன்சிலர்கள் வெங்கடேஷ், சீனிவாசலு உட்பட பலர் உடனிருந்தனர்.