உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மேட்டூர் அணை நீர்திறப்பு 22,500 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்திறப்பு 22,500 கன அடியாக உயர்வு

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழையால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்து நேற்று அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம், வினாடிக்கு, 18,610 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று மாலை, வினாடிக்கு, 28,784 கனஅடியாக அதிகரித்தது.அதேபோல் நேற்று காலை, வினாடிக்கு, 18,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை டெல்டா பாசன நீர்திறப்பு, மாலை, 22,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.மேட்டூர் கால்வாய் பாசனத்துக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 119.64 அடி, நீர் இருப்பு, 92.89 டி.எம்.சி.,யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை