பட்டாளம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மருதேரி கிராமத்தில் பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஹிந்து சமய அற-நிலையத்துறை சார்பில் கடந்த, 4ல் நடந்தது. அன்று காலை பட்டாளம்மன் கோபுர விமான பரிவார மூர்த்திகளின் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்றுடன், 24 நாட்கள் அரை மண்டலம் நிறைவ-டைந்தது. இதையடுத்து நேற்று காலை மருதேரி, மேல்செல்லம்பட்டி, கொல்லக்கொட்டாய் உள்-ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 700க்கும் மேற்-பட்டோர் கரகாட்டம், பம்பை, மேள, தாளங்கள் முழங்க, பால்குடம் ஏந்தி, ஊர்வலமாக கோவி-லுக்கு சென்று, பட்டாளம்மன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன், நாகரசம்பட்டி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலை-மையில், 30 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.