உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, ராசு வீதியை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. சிறுமியின் பெற்றோர், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதில், திரு என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !