உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்சோதனை அஞ்செட்டியில் ஆய்வு செய்த அதிகாரிகள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்சோதனை அஞ்செட்டியில் ஆய்வு செய்த அதிகாரிகள்

அஞ்செட்டி: அஞ்செட்டி தாலுகாவில், மக்கள்தொகை கணக்கெடுப்பு முன்சோ-தனை பணியை, மாவட்ட கலெக்டர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனர் ஆய்வு செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகாவில் முன்சோதனை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி கடந்த, 10ம் தேதி துவங்கி-யது. நேற்று முன்தினம் வரை, கிராமங்களில் உள்ள வீடுகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. நேற்று முதல் நேரடியாக வீடுக-ளுக்கு சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்-ளப்படுகிறது. இப்பணியை, மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனர் சுந்-தரேஷ் பாபு, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, சுந்தரேஷ்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: வரும், 30ம் தேதி வரை நேரடியாக வீடு, வீடாக சென்று மக்கள்-தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மாடக்கல், தக்கட்டி, உரிகம், கோட்டையூர், மஞ்சுகொண்டப்-பள்ளி, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், தொட்டமஞ்சி ஆகிய, 8 பஞ்.,க்களில் உள்ள, 105 குக்கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் நடக்கின்றன. வீடுகளின் வகைகள், அறைகளின் எண்ணிக்கை, குடும்ப உறுப்பி-னர்கள் விபரம், குடிநீர், காஸ் இணைப்பு, இணையதள இணைப்பு, லேப்டாப், மொபைல்போன் உள்ளிட்ட, 34 கேள்வி-களுக்கான பதில்கள் சேகரிக்கப்படும்.நாடு சுதந்திரம் அடைந்த பின் நடக்கும், 8வது மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியாகும். 2027ம் ஆண்டு டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.அதற்கான செயலிகள் அஞ்செட்டி போன்ற மலை கிராமங்களில், சரியாக செயல்படுகிறதா என்பன உட்பட பல்வேறு பிரச்னை-களை கண்டுபிடித்து சரிசெய்வதற்காக தான், முன்சோதனை அஞ்-செட்டி தாலுகாவில் நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.ஆய்வின் போது, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இணை இயக்குனர் சின்னதுரை, துணை இயக்குனர் வாசுதேவன், உதவி இயக்குனர் இளையராஜா, தாசில்தார் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை