குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 9வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் நகரில், மாநகராட்சி துவக்கப்பள்ளி இயங்குகிறது. இங்கு, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.