மளிகை கடையில் பெட்ரோல் கடைக்காரருக்கு காப்பு
ஓசூர், அஞ்செட்டி அடுத்த உரிகத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், 37, மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடையில் பெட்ரோல் விற்று வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது கடையை சோதனையிட்டதில், விற்பனைக்காக பெட்ரோல் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அஞ்செட்டி போலீசார், சந்திரசேகரை கைது செய்தனர்.