போச்சம்பள்ளி வாரச்சந்தை வெறிச்
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் காலை நேரத்தில் பனிப்பொழிவு, 10:00 மணி முதல் 5:00 மணி வரை கடும் வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால், நேற்று நடந்த போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, கிராம மக்கள் மளிகை சாமான்கள், காய்கறிகளை வாங்க வராததால், சந்தை வெறிச்சோடியது.