மின்சாரம் தாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர் பலி
மின்சாரம் தாக்கிகோழிப்பண்ணைஉரிமையாளர் பலிபோச்சம்பள்ளி, நவ. 29-கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி அடுத்த, வாடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 52; இவர் கடந்த, 10 ஆண்டுகளாக தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து பராமரித்து வந்தார்.நேற்று காலை, 5:00 மணிக்கு கோழிகளுக்கு தீவனம் வைக்க பண்ணைக்குள் சென்ற இவர், மின்சார சுவிட்ச் பாக்ஸில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.