தனியார் நிறுவனஊழியர் மாயம்
கிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணம் அடுத்த வேலம்பட்டியை சேர்ந்தவர் கீர்த்தனா, 21. வேப்பனஹள்ளியில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். கடந்த, 17ல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். அப்பெண்ணின் பெற்றோர் நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், கீர்த்தனா பணிபுரியும் நிறுவனத்தில் பணிபுரியும் கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பள்ளியை சேர்ந்த சரத்குமார், 23, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.