உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்கூட்டரிலிருந்து விழுந்த தனியார் ஊழியர் சாவு

ஸ்கூட்டரிலிருந்து விழுந்த தனியார் ஊழியர் சாவு

ஓசூர்: திருவள்ளூர் மாவட்டம், எர்ணாவூர் காந்தி நகரை சேர்ந்தவர் வினோத்ராஜ், 35. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிருஷ்ணா நகர் கோபி கார்டன் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணி-யாற்றி வந்தார். இவரும், தொரப்பள்ளி அருகே பென்னாமடம் ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்த முரளிதரன், 35, என்பவரும், நேற்று முன்தினம் மதியம், 12:45 மணிக்கு, பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சா-லையில் யம்ஹா ஸ்கூட்டரில் சென்றனர். வினோத்ராஜ் ஓட்-டினார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அருகே வரும் போது, வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்த வினோத்ராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த முரளிதரன், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை