மாற்றுத்திறனாளிகள் மனு
மாற்றுத்திறனாளிகள் மனுகிருஷ்ணகிரி, அக். 1-கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அதில், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு, இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். மாதாந்திர உதவி தொகையை, 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும், செய்கை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட, 9 கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.