உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் ராதா, கிருஷ்ணர் கல்யாண மகோத்சவம்

ஓசூரில் ராதா, கிருஷ்ணர் கல்யாண மகோத்சவம்

ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகரில் உள்ள விஜய விநாயகர் சத்சங்கத்தில், ராதா, கிருஷ்ணர் திருக்கல்யாண மகோத்சவ விழா நேற்று துவங்கியது. அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 8:00 மணி முதல், கலா சத்தியநாராயணன் குழுவினரின் சம்பூர்ண நாராயணீயம் பாராயணம், மதியம், 2:00 முதல், நாராயணீயம் தொடர்ச்சி, மாலை, 6:00 மணி முதல், ஜெய் ஸ்ரீகிருஷ்ணா பஜன் மண்டலி சார்பில், ரேணுகா ரமேஷ் குழுவினரின், தோடய மங்களம், குரு கீர்த்தனை அஸ்டபதி நடந்தது.விழாவில் நாளை (ஜூலை 13) காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை, ராதா, கிருஷ்ணர் திருக்கல்யாண மகோத்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை