உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க தீர்மானம்

ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க தீர்மானம்

ஓசூர்: தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை நலச்-சங்கம் மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட சங்கம் சார்பில், மாநில பொதுக்குழு கூட்டம், ஓசூர் சூடப்பா திருமண மண்ட-பத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கு, 28 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், பல நிறுவனங்கள் மூடப்படுகின்-றன. அதனால், ஜி.எஸ்.டி.,வரி விதிப்பை, 18 சதவீதமாக குறைக்க வேண்டும். பெட்ரோல் பங்குகளில் ஆயில் வேக்கம் மூலமாக மாற்றுவதை கைவிட வேண்டும். இருசக்கர வாகன பழுது நீக்குவோருக்கு, தேசிய நலவாரியத்தை அமைத்து, மத்திய அரசின் மூலம் புதிய தொழில்நுட்ப பயிற்சிகளை சான்றிதழ்க-ளுடன் வழங்க வேண்டும். இருசக்கர வாகனம் மற்றும் தனிநபர் காப்பீடு ஆகியவற்றுக்கு விதிக்கப்படும், 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பன உட்-பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வா-கிகள், ஆசைத்தம்பி, பாஸ்கர், தேவராஜ், குமாரவேலு, ஜமால், வேலாயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை