உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.4.80 லட்சம் உதவித்தொகை

தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.4.80 லட்சம் உதவித்தொகை

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 550 மனுக்களை பொதுமக்களிடம் பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை சார்பில், தொழிலாளர் நலத்துறையில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள், 4 பேருக்கு, 4.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி, திருமண உதவித்தொகை மற்றும் தொழிலாளர்களின் விபத்து நிவாரண உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை