கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (15ம் தேதி) பொது வினியோக திட்ட, பொதுமக்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது.இது குறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், ரேஷன் அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளும் வகையில், நாளை காலை, 10:00 முதல் பிற்பகல், 1:00 மணி வரை, பொதுவினியோக திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், வட்டத்திற்கு ஒரு கிராமம் என, 8 கிராமங்களில் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படும்.கிருஷ்ணகிரி வட்டத்தில் செம்படமுத்துார், பர்கூர் - குண்டலானுார், போச்சம்பள்ளி - பாப்பாரப்பட்டி, ஊத்தங்கரை - அனுமந்தீர்த்தம், ஓசூர் - சொக்கரசனப்பள்ளி, சூளகிரி - கூலியம், தேன்கனிக்கோட்டை - அலேநத்தம், அஞ்செட்டி வட்டம் தக்கட்டி ஆகிய கிராமங்களில் நடக்கிறது. குறைதீர் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை, வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.