கல் கடத்திய லாரி பறிமுதல்
பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த புக்கசாகரம் பஸ் ஸ்டாப் அருகே, வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்-தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 17,500 ரூபாய் மதிப்புள்ள, 35 டன் கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. கற்களுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பேரிகை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர் மற்றும் உரிமையா-ளரை தேடி வருகின்றனர்.