உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவில் கும்பாபிஷேக விழா

கோவில் கும்பாபிஷேக விழா

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், அனைத்து வீரசைவ லிங்காயத்து மடம் அகோர வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 26ல் சுபமுகூர்த்தகால், கங்கணம் கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு, 4வது கால யாக பூஜை, கடம் புறப்பாடும், தொடர்ந்து அகோர வீரபத்-திர கோபுரம் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.* தர்மபுரி அடுத்த, அக்ரஹாரத்தெரு மாரியம்மன் கோவில் புனரா-வர்த்தன அஷ்டபந்தன விமான கும்பாபிஷேக விழா நேற்று நடந்-தது. இதையொட்டி, கடந்த ஜன., 27 காலை, 6:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலிருந்து பால்குடம், முளைபாரிகை எடுத்து ஊர்வலம் நடந்தது. இரவு, 8:30 மணிக்கு மூலவர் அம்மன், துவாரசக்திகள், யந்திர பிர-திஷ்டை செய்து அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு விமான கோபுர கலசம் மற்றும் மூலவருக்கு மஹா கும்-பாபிஷேகம் செய்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர்மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை