உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த விவசாயி சாவு

கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த விவசாயி சாவு

ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து அபிநவத்தை சேர்ந்த விவசாயி பழனியப்பன், 57. நேற்று காலை, 9:30 மணிக்கு அதே பகுதியில் உள்ள அவரது விவசாய கிணற்றில் தண்ணீரை எடுத்துவிட இறங்-கினார். தொடர்ந்து மேலே வர, நீச்சல் தெரிந்த அவர், வழக்கம்போல் கயிறு மூலம் ஏறினார். அப்போது கயிறு அறுந்துபோக, கிணற்-றோர பாறை மீது விழுந்தார். அதில் தலையில் அடிபட்டு நீரில் மூழ்கினார். இதுகுறித்து, 10:30 மணிக்கு கிடைத்த தகவல்படி, 10 நிமிடத்தில் வாழப்பாடி தீயணைப்பு துறையினர் அங்கு சென்றனர். கிணற்றில் இறங்கி தேடி, 11:30 மணிக்கு பழனியப்பன் உடலை வெளியே கொண்டு வந்தனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை