உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தவர் கைது

சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தவர் கைது

கிருஷ்ணகிரி : ஊத்தங்கரையை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு கடந்த, 27ல், கட்டாய திருமணம் நடந்ததாக சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சமூக நலத்துறையின் கிராம நல அலுவலர் கீதா மற்றும் அதிகாரிகள் குழுவினர், விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமிக்கு கட்டாயப்படுத்தி திருமணம் நடந்தது தெரிந்தது. இது குறித்து கீதா புகார் படி, ஊத்தங்கரை போலீசார், சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த, சிங்காரப்பேட்டை தர்மராஜா நகரை சேர்ந்த மாதேஸ்வரன், 29, என்பவரை கைது செய்தனர். மேலும், சிறுமியின் பெற்றோர் உட்பட சிலரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை