உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேலை தேடி வந்த வாலிபர் மாயம்

வேலை தேடி வந்த வாலிபர் மாயம்

ஓசூர்: கடலுார் மாவட்டம், நெய்வேலி அருகே வடகுத்துார் காந்தி நகர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 58. டிப்ளமோ பட்ட-தாரியான இவரது மகன் தருண், 26, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எழில் நகரில் கடந்த, 5 மாதமாக தங்கி, வேலை தேடி வந்தார். ஆனால், சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த தருண் கடந்த, 29 மாலை, 6:30 மணிக்கு, தன் அறையிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை பார்த்தசாரதி புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் தருணை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ