உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

ஓசூர்:விழுப்புரம் மண்டல சுரங்கம் மற்றும் புவியியல் துறை சிறப்பு தனிப்படையினர், உதவி இயக்குனர் முத்து தலைமையில், ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில், மத்திகிரி கால்நடை பண்ணை அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் கற்களை எடுத்து செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !